×

மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

பொன்னமராவதி, ஜுன்18: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதின மிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் ஆதின மிளகி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் ஆவாம்பட்டியில் செய்து வைத்து வழிபாடு செய்யப்பட்டிருந்த மண்ணால் செய்யப்பட்ட புரவிகள், மதலைகள், குதிரைகள் ஆகிய சிலைகளை பக்தர்கள் விரதம் இருந்து தலையில் சுமந்து முக்கிய வீதி வழியாக மேளதாளத்துடன் வந்து மேலத்தானியம் ஆதின மிளகி அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் மற்றும் எட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த புரவி எடுப்பு திருவிழாவில் மேலத்தானியம், காரையூர் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Melvatyam Aidanamilaki ,festival ,Aiyanar Koil ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு